பகவத் கீதை

பத்தாம் அத்யாயம்- விபூதியோகம்

श्रीभगवानुवाच
भूय एव महाबाहो शृणु मे परमं वचः ।
यत्ते‍ऽहं प्रीयमाणाय वक्ष्यामि हितकाम्‍यया ॥ १ ॥
ஸ்ரீ பகவான் உவாச | கண்ணன் கூறியது.
பூய ஏவ மஹாபாஹோ ச்ருணு மே பரமம் வச: |
யத் தேzஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா ||     10.1

பத்தாவது அத்யாயம் அவதாரிகை

ஒன்பதாம் அத்யாயத்தில் கர்மயோகம் ஞான யோகம் இவைகளைக் காட்டிலும் பக்தி யோகமே சிறந்தது என்று சொல்லி, அந்த பக்தி யோகத்தை அதன் அங்கங்களுடன் விரிவாகக் கண்ணன் கூறினான்.

இனி இந்த பத்தாம் அத்யாயத்தில் பக்தி உண்டாகி, அது வளர்வதற்கான வழியையும், இந்த உலகில் அறிவுள்ள அறிவில்லாத எல்லாப் பொருள்களையும் தானே படைத்து, தரித்து ஆணையிட்டு நடத்துபவன் என்பதையும், உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் தனக்குச் சரீரம்; அவைகளுக்கு, தான் ஒருவனே ஆத்மா என்பதையும், மற்றும் தன் ஜ்ஞான சக்தி கலியாண குணங்களையும் விரிவாக உபதேசிக்கிறான் கண்ணன்.

திண்தோள் படைத்த வீர! என் பெருமை யெல்லாம் கேட்டுக் களிக்கும் உனக்கு, என்னிடம் பக்தி உண்டாகவும், அது நன்கு செழித்து வளரவும் நீ ஆத்ம நன்மை பெறவும் விரும்பி, நான் உனக்கு உபதேசிக்கிறேன், கேள்.

ஸ்லோகத்தின் பொருள்:

அர்ஜுன! நான் இது வரையில் எனக்குள்ள பெருமைகளை யெல்லாம் உனக்குச் சொன்னேன். அதைக் கேட்ட உனக்கு என்னிடம் அசூயை உண்டாகவில்லை. அதற்குப் பதிலாக என்னிடம் அன்பே உண்டாயிருக்கிறது. ஆதலால், உன் ஆத்ம நன்மையின் பொருட்டு உனக்கு என்னிடம் பக்தி உண்டாகி அது வளர்வதற்கான வழியைச் சொல்லுகிறேன். அதை நீ கவனமாகக் கேட்பாயாக.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top