பகவத் கீதை

यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन ।
न तदस्ति विना यत्स्यान्मया भूतं चराचरम् ॥ ३९ ॥
யச்சாபி ஸர்வபூதாநாம் பீஜம் ததஹமர்ஜுந |
ந தத் அஸ்தி விநா யத் ஸ்யாத் மயா பூதம் சராசரம் ||     10.39

அர்ஜுன! தோன்றும் பொருள்களுக் கெல்லாம் மூலகாரணம் நான். என் சம்பந்தமில்லாத பொருள்கள் உலகில் எதுவுமில்லை.

இவ்வாறு பகவான் தன் விபூதி யோகத்தை, தன் சொத்தின் சிறப்பைப் பல சுலோகங்களில் சொன்னான்; ஒவ்வோர் வகை பொருள்களிலும் சிலவற்றைச் சொல்லி, அவைகளில் மேம்பட்ட பொருள் தான் என்று சொன்ன திலிருந்து, இப்படியே உலகிலுள்ள மற்ற அனைத்தும், அவன் விபூதி; எல்லாம் அவனுக்கு உடலாய், தான் அவைகளில் ஆத்மாவாக இருக்கிறவன் என்பது தேறி நிற்கும். இதையே அவன் முன்னுரையாக “அஹமாத்மா குடாகேச” என்கிற சுலோகத்தில் தெளிய வைத்திருக்கிறான்.

இன்னும் இதில் பகவான் அறிவற்ற பல பொருள்களையும், ஆயுதம், மரம், மலை போன்றவைகளையும் எடுத்து அவை நான் என்று சொல்லியிருக்கிறான்; அறிவில்லாத அசேதனப் பொருள்களும் ஸர்வஜ்ஞனான பகவானும் ஒன்றாக மாட்டா; இதை அத்வைதிகளும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். ஆதலால் அந்த சேதனப்பொருள்கள் தனக்குச் சரீரம், தான் அவைகளுக்கு ஆத்மா என்பதே பொருள் என்பதை எல்லா மதத்தினரும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். அதே போல பல சுலோகங்களில் சொல்லப்பட்டிருக்கும் அறிவுள்ள உயிரினங்களும் தனக்குச் சரீரம். அவைகளுக்கு தான் ஆத்மா, என்கிற 'சரீர - ஆத்ம - தொடர்பையே’ இங்கு சொல்லியிருக்கிறான் கண்ணன், என்பதே பொருளாகும். மற்றவர்கள் கூறுவது போல, இந்த இடத்தில் அறிவுள்ள ஜீவர்களும் பகவானும் ஒன்றே என்பது பொருளல்ல.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top