பகவத் கீதை வெண்பா

அந்தக் கருமங்க ளாங்கவற்றிற் றெத்தற்ற
சந்தத் தெனைமுயலான் றன்படிபோ- லிந்தப்
பெருந்தகைமை யாலிருக்கும் பெற்றியில னாங்கு
வருந்தவிறை யும்பிணியா வாய்ந்து.       9.9

அந்தக் கருமங்கள்

(ஸருஷடி முதலான) அந்தச் செயல்கள்

ஆங்கு அவற்றில் தொதது அற்ற சந்தத்து

அத்தகைய அச்செயலகளில் பற்றற்றவனாய் ஸங்கல்பத்தை உடையவனாய்

முயலான தன் படிபோல் இந்தப் பெரும் தகைமையால் இருக்கும் பெற்றியினன்

(ஒரு கார்யத்தில்) உதாஸீநனாய் இருப்பவனைப்போலே (ஜீவர்களின் வைஷமயத்துக்கு முக்கிய காரணமாய் இராமலிருக்கையாகிற) இந்தப் பெரிய தன்மையோடு இருக்கும் பெருமையை உடையவனான

எனை

என்னை

ஆங்கு

இந்தச் செயல்களால் ஏற்படும் வைஷம்யத்தால்

வாய்ந்து

(தோஷங்கள்) ஏற்பட்டு

வருந்த

(நான்) தாழ்வுறும்படியாக

இறையும் பிணியா

சிறிதும் கட்டுப்படுத்தமாட்டா 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top