பகவத் கீதை வெண்பா

எவ்வளவு நின்றியலு மிந்தப் பொருளுண்டா
மவ்வளவு தன்னை யடல்விசயா – இவ்வகையே
சித்து மசித்துஞ் சிறந்த புணர்ப்பதனா
லொத்தியல்வ தென்றே யுணர்   13.26

அடல் விசயா

போரில் வல்ல விஜயனே!

நின்று இயலும் இந்த பொருள்

அசையாது நிற்கும் ஸ்தாவரமாகவும் அசையும் ஜங்கமமாகவும் உள்ள இந்த ஜீவராசி

எவ்வளவு உண்டாம்

எத்தனை உள்ளதோ

அவ்வளவு தன்னை

அத்தனை பொருளையும்

இவ்வகையே

முற்கூறியபடி

சித்தும் அசித்தும் சிறந்த புணர்ப்பதனால் ஒத்து இயல்வது என்றே

சரீரமும் ஜீவனும் சிறப்பாகச் சேர்ந்திருப்பதால் ஒன்றுபட்டுச் செயல்படுவது என்றே

உணர்

அறிவாய்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top