பகவத் கீதை வெண்பா

பூமிமிசை மானிடரிற் பொன்னுலகின் மன்னுவா
ராமிமையோர் தம்மி லமர்ந்தொருவர் – தாமியலு
முன்னைப் பிரகிருதி மூளிந்த முக்குணங்க
டன்னைப் பிரிந்ததிலைத் தான்.         18.40

தோன்றுழியில்

இந்த பூமியில் இருக்கும் மனிதர்களிலும்

பொன்னுலகில் மன்னுவாராம் இமையோர் தம்மில்

சொர்க்கலோகத்தில் இருக்கும் தேவர்களிலும்

அமர்ந்த ஒருவர் தாம்

சேர்ந்திருக்கும் ஒருவர் கூட

இயலும்

எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருப்பவையாய்

முன்னை பிரகிருதி மூள்

அசேதனங்களுக்கெல்லாம் காரணமான ப்ரக்ருதியிலிருந்து உண்டானவையான

இந்த முக்குணங்கள் தன்னை

இந்த மூன்று குணங்களை

தான் பிரிந்தது இலை

விட்டிருப்பதில்லை

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top