ருத்திரர், ஆதித்யர், வசுக்கள், சாத்தியர், விசுவேதேவர், அசுவினிதேவர், மருத்கணங்கள், ஊஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர், இவர்கள் கூட்டம் கூட்டமாக வியப்புடன் உம்மையே பார்க்கிறார்கள். (ஊஷ்மபர் என்றால் உஷ்ணமாக உண்கிற பித்ருதேவர்கள்)
நெடுந்தோளாய்! உம்முடைய பலமுகங்கள், கண்கள், பல கைகள், துடைகள், பலபாதங்கள், வயிறுகள், பயங்கரமான பல கோரைப்பற்களை உடைய, உமது பேருருவைக் கண்டு உலகில் யாவரும் நடுங்குகிறார்கள்; நானும் அவ்வாறே அச்சமுறுகிறேன்.