பகவத் கீதை

नमः पुरस्तादथ पृष्टतस्‍ते नमोऽस्तु ते सर्वत एव सर्व ।
अनन्तवीर्यामितविक्रमस्त्वं सर्वं समाप्‍नोषि ततोऽसि सर्वः ॥ ४०॥
நம: புரஸ்தாத்அத ப்ருஷ்ட தஸ்தே நமோஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ |
அநந்த வீர்யாமிதவிக்ரமஸ்த்வம் ஸர்வம் ஸமாப்நோஷி ததோஸி ஸர்வ: ||     11.40

எல்லாமானவரே, உமக்கு முன்புறத்திலும் பின்புறத்திலும் நமஸ்காரம் செய்கிறேன், எல்லாப் பக்கங்களிலும் உமக்கு நமஸ்காரம். அளவில்லாத வீர்ய பராக்ரமத்தை உடைய நீர் அனைத்திலும் நன்கு வியாபித்திருக்கிறீர். ஆதலால் நீரே யாவையுமாகிறீர்.

வீர்யம் என்பது வல்லமை. அந்த வீர்யத்தை நடைமுறையில் நடத்தும் பராக்ரமம் உடையவன் பகவான். அறப் பெரிய செயல்களைச் செய்தும், சிறிதும் களைப்பு தட்டமையே வீர்யம். ஏழு வயதில் ஏழு நாள் கோவர்த்தனகிரியை தன் விரலினால் தாங்கி நின்று ஆயர்களையும் ஆடு மாடுகளை ரக்ஷித்தும், அவனுக்கு களைப்பு சிறிதுமில்லை. இதுவே வீர்யம் என்கிற சிறந்த குணம்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top