பகவத் கீதை

यस्मान्नोद्विजते लोका लोकोन्नोद्विजते च यः ।
हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः ॥ १५ ॥

யஸ்மாந்நோத்விஜதே லோகோ லோகாந்நோத்விஜதே சய: |
ஹர்ஷாமர்ஷபயோத்வேகைர் முக்தோ ய: ஸ ச மே ப்ரிய: ||        12.15

எவனிடமிருந்து உலகம் பயப்படுகிறதில்லையோ, உலகினால் எவனுக்கு ஒருவித பயமுமில்லையோ, எவன் களிப்பு, சினம், அச்சம், கலக்கம் இவைகளிலிருந்து விடுபட்டவனோ, அவன் எனக்குப் பிரியனாகிறான்.

அந்த கர்மயோகி உலகிலுள்ள எந்த உயிர்களுக்கும் ஒரு கெடுதலும் செய்யான்; ஆதலால் இவனிடமிருந்து உலகுக்குப் பயமில்லை. அதேபோல உலகிலுள்ள எதிலும் இவனுக்கு விருப்பமோ, வெறுப்போ யில்லாததினால், எல்லா உயிர்களிலிருந்தும், இவனுக்கு பயமேதும் இராது. இவன் உலகத்தில் ஒட்டற்று வசிப்பவனாகையினால் சந்தோஷமோ துக்கமோ, மற்றும் கோபம், பயம், கலக்கம் முதலியவை இவனுக்கு உண்டாகக் காரணமேயில்லை.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top