பகவத் கீதை

ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पराः |
अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते ॥ ६॥

யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா: |
அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே ||        12.6

எவர் எல்லா கர்மங்களையும் எனக்கு அர்ப்பணம் செய்து, வேறு பயனை விரும்பாமல், என்னை அடைவதே பரம பிரயோசனமாக என்னை த்யானம் செய்து உபாஸிக்கிறார்களோ, அதாவது பக்தி செய்கிறார்களோ, என்னிடத்திலேயே மனத்தை வைத்துள்ள அவர்களை ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலிருந்து நான் கரையேற்றுகிறேன்.

தாங்கள் செய்யும் லௌகிக செயல்களையும் சந்தியாவந்தனம் பகவதாராதனம், யஜ்ஞம், யாகம் முதலான வைதிக கருமங்களையும் பகவானுக்கு அர்ப்பணம் (ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து) என்று செய்ய வேண்டும். வேறு விஷயம் கலசாமல் என் ஒருவனிடமே மனத்தை வைத்து, என்னை அடைவதே பயனாக எண்ணி, என்னிடம் பக்தி செய்பவனுக்குள்ள, மோக்ஷத்திற்குத் தடையான புண்ய பாபங்களைப் போக்கி, யமனுக்குச் சமானமான அதாவது ஆத்ம நாசத்தை விளைவிக்கும் ஸம்ஸாரமான பெருங்கடலை நானே தாண்டுவிக்கிறேன், என்கிறான் கண்ணன்.

இதனால் அவன் செய்யும் பக்தியும் மோக்ஷத்திற்கு உபாயம் அன்று; பகவானே அதை அடைவிக்கிறான்; சித்த தர்மமான அவனே மோக்ஷோபாயம் என்பது கண்ணனாலேயே கூறப்பட்டுள்ளது.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top