பகவத் கீதை வெண்பா

என்னைப் பரிக ளிவற்றி லமுதுதித்த

முன்னைப் பரியாக முற்றுணர்நீ – யன்னவகை

யைரா வதமா வணிகளிற்றுக் காங்குநரர்க்

கேரார் நராதிபனா வெண்.                    10.28

பரிகள் இவற்றில்

குதிரைகளுக்குள்

அமுது உதித்த முன்னைப் பரியாக

திருப்பாற்கடலமுதத்தில் உண்டான

பழங்குதிரையான

உச்சைஶ்ஶ்ரவஸ்ஸாக

என்னை

என்னை

நீ

நீ

முற்று உணர்

நன்கு உணர்வாயாக

அணி களிற்றுக்கு

அலங்கரிக்கப்பட்ட யானைகளுக்குள், சித்ரரதன் நானே

அன்ன வகை

முற்கூறியபடி திருப்பாற்கடலமுதத்தில் உதித்த

ஐராவதமா

ஐராவதமென்னும் யானையாக (என்னை அறிவாய்)

ஆங்கு

இவ்வுலகில்

நரர்க்கு

மனிதர்களுக்குள்

ஏர் ஆர் நராதிபனா

சிறப்புடைய அரசனாக

எண்

(என்னை) நினைப்பாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top