பகவத் கீதை வெண்பா

அந்தன் புதல்வரிவ ரல்லா நிருபருடன்
பந்தமுறு பாட்டன் றுரோணன்தான் – முந்துற்றுக்
கன்னனிவ னம்படையிற் காவலரோ டெல்லாருந்
துன்னவுனைச் சேர்ந்திடுவர் தொக்கு.         11.27

அந்தன் புதல்வர் இவர்

குருடனான த்ருதராஷ்ட்ர புத்திரர்களான இவர்கள்

பந்தமுறு பாட்டன்

(பேரர்களிடம்) பாசமுள்ள பாட்டனான பீஷ்மன்

துரோணன் தான்

துரோணாசார்யர்

துரோணாசார்யர்

முன்னே நிற்கும் கர்ணனாகிற இவன்

(ஆகியவர்கள்) அல்லா நிருபருடன்

(அவர்களைச் சேர்ந்த) அரசர் கூட்டங்களோடு

நம் படையில் காவலரோடு

நம் படையைச் சேர்ந்த (சில) அரசர்களோடு

எல்லாரும் தொக்கு

அனைவரும் ஒன்றுசர்ந்து

துன்ன

நெருக்கிக் கொண்டு

உனை சேர்ந்திடுவர்

உன்னிடம் வருகிறார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top