பகவத் கீதை வெண்பா

உன்பெரிய ரூப மொளிரமுகங்கண் டோடுடைதாள்
வன்பல் வயிறெயிறு மாய்ப்பயமா – முன்படிகண்
டோங்குபுயத் தாயுலக முண்ணடுங்கு நானதிற்
றாங்குபயஞ் சார்வன் றளர்ந்து.      11.24

ஓங்கு புயத்தாய்

நெடுந்தடக்கையனே

உன் பெரிய ரூபம் ஒளிர்முகம் கண்தோள் துடை தாள் வன் பல வயிறு எயிறுமாய்

உனது பெரிய உருவத்தில் விளங்கும் தோள்கள், துடைகள், கால்கள், பலம் மிக்க பலவயிறுகள், பற்கள் ஆகியவற்றைக்கொண்டதாய

பயமாம்

மிக பயங்கரமாயிருக்கும்

உன்படி கண்டு

உனது விஶ்வரூபத்தைக்கண்டு

உலகம்

உலகினர்

உள் நடுங்கும்

நெஞ்சு நடுங்குவர்

அதிற்றாங்கு

அதுபோலவே

நான்

நானும்

தளர்ந்து பயம் சார்வன்

தளர்வடைந்து பயப்படுகிறேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top