பகவத் கீதை வெண்பா

பன்னிரெண்டாம் அத்யாயம் - பக்தியோகம்

அத்தியாயப் பொருளின் சுருக்கம்

பத்தி யறிவாற் கடக்கும் பலவகையு
மத்தி லுகபபி னதிசயமு-முத்தி தரும் 
பண்பி னருள்கீதை பன்னிரண்டா மோத்துரைக்குந்
திண்பயிலுஞ் சொல்லாற செறிந்து.        12.0

முத்தி தரும் பண்பின் அருள் கீதை

வீடு பேற்றைத் தரும இயல்பால் (கண்ணன்) அருளிய கீதையின்

பன்னிரணடாமோதது

பன்னிரண்டாவது அத்தியாயம்

பத்தியறிவாற்கு

பக்தியோகத்தை அறிபவனுக்கு

அடக்கும் பல வகையும்

கைக்கொள்ளவேண்டிய பல குணங்களும்

அத்தில

அந்த பக்தியோகத்தில்

உகப்பின் அதிசயமும்

(எம்பெருமானுக்குள்ள) அன்பின் மிகுதியும்

திண் பயிலும் சொல்லால் செறிந்து உரைக்கும்

உறுதியானதாய் அனைவராலும் அனுஸந்திக்கத்தக்கதான சொற்களால நன்றாகக்கூறும். 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top