பகவத் கீதை வெண்பா

ஆருயிரின் மேலறிவி லாய்ந்தென்று நின்றமர்வு
பேருணர்வாந் தத்துவத்தின் பீடறிவு – சீருடைய
மெய்ஞ்ஞான மாமதென மிக்குரைத்தேன் வேறுளது
பொய்ஞ்ஞான மாகும புறம் .      13.11

ஆருயிரின் மேல் அறிவில் ஆய்ந்து என்றும் நின்று அமர்வு

அருமையான ஆத்மாவைப்பற்றியதான அறிவில் ஆராய்ச்சியோடு என்றும் நிலையாயிருத்தல்

தத்துவத்தின் பேருணர்வாம் பீடு அறிவு

உண்மை அறிவு உண்டாவதற்கு உறுப்பான சிறந்த சிந்தனை (ஆகிய இவ்விருபது குணங்களும்)

சீர் உடைய மெய் ஞானம் ஆமது

சிறப்புடைய ஆத்மஜ்ஞானத்துக்கு ஸாதனமாவது

என

என்று

மிக்கு உரைத்தேன்

உறுதியாகச் சொன்னேன்

புறம் வேறு உளது

இதற்கு மாறாக உள்ளது அனைத்தும்

பொய் ஞானம் ஆகும்

ஆத்மஜ்ஞானத்திற்கு இடையூறு விளைப்பது ஆகும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top