பகவத் கீதை வெண்பா

ஓங்குவிசும் பெங்கு முளதாயு நுட்பத்தா
லாங்கதனிற் றோயா ததுபோலத் – தாங்குடல
மேதிலுநின் றாலு மிலகுமுயி ரவ்வண்ண
மாதியல்வாற் றோயான மங்கு.   13.32

ஓங்குவிசும் பெங்கு முளதாயு நுட்பத்தா
லாங்கதனிற் றோயா ததுபோலத் – தாங்குடல
மேதிலுநின் றாலு மிலகுமுயி ரவ்வண்ண
மாதியல்வாற் றோயான மங்கு

ஓங்கு விசும்பு -சிறப்புள்ள ஆகாயம்
எங்கும் உள தாயும்-எல்லாப்பொருள்களோடும் சேர்ந்திருந்தபோதிலும்
நுட்பத்தால் – நுண்ணியதாயிருக்கையால்
ஆங்கு அதனில் தோயாதது போல – அந்த எல்லாப்பொருள்களின் தன்மைகளோடு
ஒட்டாமலிருப்பதுபோல
இலகும் உயிர்- (மிக நுண்ணியதாய்) விளங்கும் ஜீவாத்மாவும்

தாங்கு உட லம் ஏதிலும் நின்றாலும்-தான் தாங்கி நிற்கும் தேவர் மனிதர் முதலான
எந்த உடலில் இருந்தபோதிலும்
அங்கு ஆதி யல்வால் – அந்தந்த தேஹத்தில் அதின் தன்மைகளோடு
அவ்வண்ணம் தோயானாம் – ஆகாயத்தைப் போலவே ஒட்டாமலிருக்கிறான்   13.32

ஓங்கு விசும்பு

சிறப்புள்ள ஆகாயம்

எங்கும் உள தாயும்

எல்லாப்பொருள்களோடும் சேர்ந்திருந்தபோதிலும்

நுட்பத்தால்

நுண்ணியதாயிருக்கையால்

ஆங்கு அதனில் தோயாதது போல

அந்த எல்லாப்பொருள்களின் தன்மைகளோடு ஒட்டாமலிருப்பதுபோல

இலகும் உயிர்

(மிக நுண்ணியதாய்) விளங்கும் ஜீவாத்மாவும்

தாங்கு உட லம் ஏதிலும் நின்றாலும்

தான் தாங்கி நிற்கும் தேவர் மனிதர் முதலான எந்த உடலில் இருந்தபோதிலும்

அங்கு ஆதி யல்வால்

அந்தந்த தேஹத்தில் அதின் தன்மைகளோடு

அவ்வண்ணம் தோயானாம்

ஆகாயத்தைப் போலவே ஒட்டாமலிருக்கிறான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top