பகவத் கீதை வெண்பா

போத முனிவர் புகல்வர் பலவகையே
வேதம் விவிதக்கால் வேறுபட-வோதுமது
வேதாந்த சூத்திரங்கள் வேறுரைக்கு மேதுவுடன்
மீதார்ந்த நிச்சயததான் மிக்கு.      13.4

போதமுனிவர்

உண்மையறிவையுடைய (பராசரர்) முதலான ரிஷிகள்

பலவகையே புகல்வர்

(இந்த தோஹாத்மஸ்வரூபத்தை) பலவிதமாகக் கூறுவர்

விவிதக் கால் வேதம்

பலவகைப்பட்ட வேதம்

அது வேறுபட ஓதும்

அந்த தேஹாத்ம ஸ்வரூபத்தைத் தனித்தனியாக ஓதும்

வேதாந்த சூத்திரங்கள்

(பாதராயணர் அருளிய) ப்ரஹ்ம ஸூத்திரத்திலுள்ள ஸூத்ரங்கள்

ஏதுவுடன்

யுக்திகளோடு

மீதார்ந்த நிச்சயத்தால்

சிறப்பான நிச்சயத்தோடு

மிக்கு வேறு உரைக்கும்

(அந்த தேஹாத்ம ஸவரூபத்தை) பலவகையாகவும் தனித்தனியாகவும் கூறும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top