பகவத் கீதை வெண்பா இந்த வறிவை யினிதார்ந்திங் கென்னொப்பா மந்த வுயர்வை யடைந்தவர்கள் – பந்தமுடன்சற்கத்தி லும்பிறவார் தாந்துயரஞ் சாரார்க ளொற்கப் பிரளயத்தி னுள். 14 . 2 இந்த அறிவை (சொல்லப்போகும்) இந்த ஞானத்தை இனிது ஆர்ந்து இனிதாகப்பெற்று இங்கு என் ஒப்பாம் அந்த உயர்வை அடைந்தவர்கள் இத்தேரில் வீற்றிருக்கும் என்னோடு ஒத்திருக்கும் அத்தகைய பெருமையைப் பெற்றவர்களாய் சற்கத்திலும் பந்தமுடன் பிறவார் (அவர்கள்) ஸம்ஸாரத்தில் கட்டுப்பட்டுப் பிறப்பை அடைவதில்லை; ஒற்கப்பிரளயத்தினுள் தாம் துயரம் சாரார்கள் மரணமாகிற துன்பத்தையும் அடைவதில்லை. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0