பகவத் கீதை வெண்பா நெஞ்சுட் கலந்தென்னை நேர்நினைத்து நூலிட்டுச் செஞ்சுடர்சேர் தாற்பரிய தீபத்தாற்-பஞ்சவர்தந் தேர்ப்பாகன் கீதைச் சிறந்தபொருள் காட்டினா னேர்ப்பாகு நன்றே யினிது. 18.78E பஞ்சவர்தம் தேர்ப்பாகன் பஞ்சபாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனனுக்குச் சாரதியாய் இருந்த கண்ணன் என்னை நெஞ்சுள் கலந்து என்னுடைய மனத்தில் புகுந்து நேர் நினைத்து நூல் இட்டு என்னைத்தக்கவனாக எண்ணி இந்நூலை எழுதச் செய்து செஞ்சுடர் சேர் தாற்பரிய தீபத்தால் செவ்வையான பொருளோடு கூடிய (ஒளிமிக்க) தாத்பர்யமாகிற விளக்கால் கீதை சிறந்த பொருள் காட்டினான் கீதையின் சிறந்த பொருளை வெளிப்படுத்தினான் நேர்ப்பாகு நன்றே இனிது சாரதியாக இருந்து என்னை நேராகச் செலுத்தியது நன்றாகவும் இனிதாகவும் உள்ளது Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0