பகவத் கீதை வெண்பா

நன்மைத் தகானறிவு நண்ணான் முயற்றியுறான்
வன்மைச் சடன்மறத்தின் மன்னுவான் – புன்மைசேர்
மந்தன்சோம் பண்னெடுக வாதைநினை யுங்கர்த்தா
சந்தத்தாற் றாமதனாந் தான்.         18.28

நன்மைத்தகான்

(ஸாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட) நற்கர்மங்களைச் செய்யத்தகுதியில்லாதவனாய்

அறிவு நண்ணான்

(ஸாஸ்த்ரங்களைக்கற்று) அறிவடையாதவனாய்

முயற்றி உறான்

(ஸாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட கர்மங்களைத்) தொடங்கும் இயல்வேயில்லாதவனாய்

வன்மைச் சடன்

வஞ்சிப் பதில் நிலைநிற்பவனாய்

புன்மைசேர் மந்தன்

(தொடங்கிய கர்மங்களிலும்) மந்தமாகச் செயல்படும் தாழ்வையுடைய

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top