பகவத் கீதை வெண்பா ஏதம்போற் கன்ம மிகழப் படுமென்று போதர் சிலருரைப்பர் புந்தியான் – மீதென்று மெச்சந் தவந்தான மீங்கிகழ்வ தல்லதென நிச்சஞ் சிலருரைப்பர் நின்று. 18.3 சிலர் சில அறிவாளிகள் காமக் கருமங்கள் கைவிடுதல் ஒரு பலனை விரும்பிச் செய்யப்படும் காம்ய கர்மங்களை அறவே கைவிடுவதே சேமத்தது சன்னியாசம் நன்மையை விளைக்கும் ஸந்யாஸம் என்று உரைப்பர் என்று கூறுவர் சிலர் மற்றும் சில அறிவாளிகள் ஏமத்தால் (ஆத்மாவை) ரக்ஷிக்கும் பொருட்டு எக்கருமப் பேறும் இகழ்வு தியாகம் நித்யம் நைமித்திகம் காம்யம் என்னும் எல்லாக்கருமங்களின் பலங்களையும் கைவிடுவதே தியாகமாகும் என என்று சிக்கெனவே சொல்வர் உறுதியாகக் கூறுவர் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0