பகவத் கீதை வெண்பா

இரண்டாம் அத்யாயம் - ஸாங்க்யயோகம்

அத்தியாயார்த்தச் சுருக்கம்

மேலிரண்டா மோத்தால் விசயன் வெறுப்பகற்றக்
கோலி யுயிருடலின் கூற்றிவைகள் – காலியுடன்
போமாயன் மன்னுயிர்கள் பொன்றாமை முன்னகமா
மாமாயன் சொன்னான் மகிழ்ந்து.        2.0

காலியுடன் போம் ஆயன்

பசுக்களின் பின்போகும் இடையனும்

மாமாயன்

பேராச்சரியமான ஸ்வரூபரூபகுண விபூதிகளை யுடையவனுமான கண்ணன்

விசயன் வெறுப்பு அகற்ற கோலி

அர்ஜுனனுக்கு (யுத்தத்தினாலுண்டான) வெறுப்பை! நீக்கநினைத்து

மன் உயிரின் பொன்றாமை முன்னகமா

நிலைநிற்கும் ஆத்மாவின் அழியாமையை முன்னிட்டுக்கொண்டு

உயிர் உடலின் கூற்றிவைகள்

உயிரினுடையவும் உடலினுடையவும் (அழியாமை, அழியும் தன்மை முதலான) இத்தன்மைகளை

மேல் இரண்டாம் ஓத்தால்

அடுத்ததான இரண்டாமத்தியாயத்தினால்

மகிழ்ந்து சொன்னான்

மகிழ்ச்சியுடன் உபதேசித்தான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top