பகவத் கீதை வெண்பா

காயங் கழிபபதற்கு முன்னிலிலிக் காலத்தே 
மாயந் தருகாமம் வல்வெகுளி-யாயவிவை
வேகத்தைத் தானடக்க வல்லா னவனயோகி
போகத்தைத் தானடையும் போய்.        5.22

காயம் கழிப்பதற்கு முன்னிலில்

சரீரம் உயிரைவிட்டுப் பிரிவதற்கு முன்னால்

இக்காலத்தே

(ஸாதநாநுஷ்ட்டான நிலையான) இக்காலத்திலேயே

மாயம் தரு காமம் வலவெகுளி ஆய இவை

ஆய்சர்யமான மயக்கத்தை விளைக்கும் காமம் வலிமைமிக்க கோபம் ஆகிய இரண்டினால்

வேகத்தை

(மனம் மெய் மொழிகளிலே ஏற்படும்) வேகத்தை

தான் அடக்க வல்லான்

தானே கட்டுப்படுத்த வல்லவனே

யோகி

ஆத்மாநுபவத்தை அடையத்தக்கவனாவான்

போய்

இந்த சரீரம் விட்டுப்போய்

போகத்தை தான் அடையும்

ஆத்மாநுப ஸுகத்தைத் தன்னடையே அடைவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top