பகவத் கீதை வெண்பா

தன்னுளம ரின்பத்தோன் றன்னிழலிற்றான் மகிழ்வோன்
றன்னு ளுயர்சோதி தானுடையோன் – றன்னுருவே
யான பிரமமா யந்தப் பிரமத்தைத்
தானடையு மினபந் தழைத்து.      5.23

தன்னுள் அமர் இன்பத்தோன்

ஆத்மாநுபவத்தையே போக்யமாகக் கொண்டவனாய்

தன் நிழலில் தான் மகிழ் வோன்

அதையே போகஸ்தானமாகக் கொண்டவனாய்

தன்னுள் உயர்சோதி தான் உடையோன்

அதையே போகோபகரணமாகக் கொண்டவனாயிருப்பவன்

தன் உருவேயான பிரமமாய்

ப்ரஹ்மம் எனப்படும் சுத்தாத்ம ஸ்வரூபநிலையை அடைந்து

இன்பம் தழைத்து

ஸுகம் விஞ்சப்பெற்று

அந்த பிரமத்தை தான் அடையும்

அந்த சுத்தாத்மாவைத்தான் அநுபவிப்பான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top