பகவத் கீதை வெண்பா

இதிராச வித்தை யிதிராச குய்ய 
மதியாம் பவித்திர மிதாகு-மெதிர்காணு
மாட்சிதருந் தன்மத்து மன்னுஞ் சுகத்தியலு
மேட்சிதரும் வீயா திது .       9.2

இது இராச வித்தை

இந்த பக்தியோகம வித்யைகளுள் தலைசிறந்தது

இது இராச குய்யம

இது ரஹஸயங்களுள் தலைசிறந்தது

இது அதியாம பவித்திரம ஆகும்

இது பாபங்களைப் போக்கும் பவித்திரங்களில் மிகச்சிறந்ததாகும்

எதிர் காணும் மாட்சி தரும்

(என்னை) நேரே காணும் பெருமையைத் (தன்னை அனுஷ்டிப்பவனுக்குத்) தரும்

தன்மதது மனனும்

(என்னை ஸாதி ததுக்கொடுக்கும்) தாமமாகவும் நிலைபெறும்

மேட்சிதரும் சுகத்து இயலும்

செய்வதற்கு மிகவும் இனியதாயிருக்கும்

இது வீயாது

(பலனைக் கொடுத்த பின்பும்) இது அழியாமலிருக்கும் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top