கீதார்த்தசங்க்ரஹம்

एकान्तात्यन्त- दास्यैकरतिस्तत्पदमाप्नुयात् ।
तत्प्रधानमिदं शास्त्रमिति गीतार्थसङ्ग्रहः । ३२ ॥
ஏகாந்தாத்யந்த தா3ஸ்யைக ரதிஸ் தத்பத3மாப்நுயாத் |
தத்ப்ரதா4 நமித3ம் ஶாஸ்த்ரமிதி கீ3தார்த்த2 ஸங்க்3ரஹ: ||

ஏகாந்தாத்யந்த தா3ஸ்யைக ரதி:

எம்பெருமானுடைய முகமலர்த்தியையே பயனாகக்கொண்டதாய், எல்லாக்காலத்திலும் செய்யப்படுவதான அடிமையையே விரும்புகின்ற பரமைகாந்தி,

தத்பத3ம்

(அவ்வடிமைக்குறுப்பாக) எம்பெருமானுடைய திருவடிகளை,

ஆப்நுயாத்

அடைவான்;

இத3ம் ஶாஸ்த்ரம்

இந்த கீ3தா ஶாஸ்த்ரம்.

தத்ப்ரதா4நம்

சேதனனைப் பரமைகாந்தியாக்குவதை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டது

இதி

இவ்வண்ணமாக,

கீ3தார்த்த2 ஸங்க்3ரஹ:

கீ3தையின் பொருளைச் சுருக்கிக்கூறும் ‘கீ3தார்த்த2 ஸங்க்3ரஹம்’ என்னும் நூல் நிறைவுபெறுகிறது.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top