எல்லா அரசர் கூட்டங்களும், திருதராஷ்ட்ரன் புத்திரர்கள்; அனைவரும், பீஷ்மர், த்ரோணர், கர்ணன், இன்னும் நம் பக்கத்திலுள்ள போர்வீரர்களும் பரபரப்புடன் உன் வாயில் புகுகின்றனர். சிலர் உன் பயங்கரமான, கோரைப் பற்களின் இடையில் அகப்பட்டு பொடிப்பட்ட தலைகளோடு காணப்படுகின்றனர்.