இந்த ஜீவன், மனம், கண், காது, மூக்கு, நா, தோல், முதலிய இந்த்ரியங்களை ஏவி, அவைகளின் மூலம் விஷயங்களில் தொடர்பு கொண்டு, அவைகளை அனுபபிக்கிறான்.
இச்சரீரம் ஸத்வ ரஜஸ் தமோ குணங்களை உடையது; இவைகளினால் உண்டாகும் விஷயங்களை அனுபவிக்கிறவன் ஜீவன். இப்படி சில காலம் அனுபவித்திருந்து, அந்த உடலை விட்டு வெளியேறுகிறான். இதை மூடர்கள் அறிகிறதில்லை. ஜ்ஞானிகளே அறிவர்.