பகவத் கீதை வெண்பா என்றன் பிரகிருதி யேயந்துநா னிங்கிவற்றை முன்றன்மை யாற்பின்னு மூண்டளிப்பன-றன் றன்மை சோ்வசமொன் றின்றிச் சிறந்த வசத்திலவை யார்வகையே பூதமுமங் காம். 9.8 என்றன் பிரகிருதி (பலவிதமாகப் பரிணமிக்கும்) என்னுடைய மூலப்ரக்ருதியை ஏயந்து (எட்டுவிதமாகப்) பரிணாமம் அடையச்செய்து நான் நான் இங்கு அங்கு பூதமும் ஆம் இவற்றை கீழ் மேல் உலகங்களில் (தேவா் முதலான நாலுவகைப்பட்ட) இந்த ஜீவராசிகள் முழுவதையும் தன் தன்மை சோவசம் ஒன்று இன்றி தன் வசம் இழந்ததாய் சிறந்த வசத்தில் அவை ஆர் வகையே (ப்ரக்ருதியின்) உறுதியான வசத்திலேயே அவை இருக்கும் படி முன் தன்மையால் முன் கல்பத்திலிருந்தபடியே பின்னும மூண்டு அளிப்பன் மறுபடியும் மறுபடியும் படைப்பேன் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0