பகவத் கீதை வெண்பா ஆங்குமிக வற்புதமா மண்ணல் வடிவினையுமீங்குநினை தோறு மெழவியப்பா – யோங்கு முகப்புமிகு மேன்மேலு முற்றென் றுரைத்தான் மிகப்புகழ்சேர் சஞ்சயன்றான் மிக்கு. 18.77 ஆங்குமிக அற்புதமாம் போர்க்களத்திலே பேராச்சரியமாகக் காட்சியளித்த அண்ணல் வடிவினையும் கண்ணனுடைய விஸ்வரூபத்தையும் ஈங்கு நினைதோறும் இவ்விடத்திலிருந்து நினைக்கும் போதெல்லாம் எழ வியப்பாய் ஓங்கும் மிகுந்த வியப்பு (எனக்கு) ஓங்கிநிற்கும் மேன் மேலும் உற்று உகப்பு மிகும் மேன்மேலே வளர்ந்து ஆனந்தம் மிகுதியாகும் என்று என்று மிகப் புகழ் சேர் சஞ்சயன் தான் மிகவும் புகழுடைய ஸஞ்ஜயன் மிக்கு உரைத்தான் உறுதியாகக் கூறினான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0