ஆனால் அர்ஜுன! உனது இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண இயலாது; உனக்கு தெய்வீகத் தன்மையான கண்ணைக் கொடுக்கிறேன்; அதைக் கொண்டு எனது ஆளும் வைபவத்தைப் பார்.
பிரக்ருதியினாலான கண்ணைக்கொண்டு ப்ரக்ருதிப் பொருளைத் தான் காணமுடியும்; அதுவும் தூரத்திலிருக்கும் பொருளைக் காண தூரத்ருஷ்டிக் கண்ணாடி வேண்டும். பூதக்கண்ணாடியைக் கொண்டே நுண்ணிய பொருளைப் பார்க்க முடியும். அதே போல அப்ராக்ருதமான பகவத் ரூபத்தைக்க் காண தெய்வீகமான, ஞானக்கண் வேண்டும்; அதுவும் பகவானுடைய இன்னருளாலேயே கிடைக்கும்.