பகவத் கீதை

किरीटिनं गदिनं चक्रिणं च तेजोराशिं सर्वतोदीप्तिमन्तम् ।
पश्यामि त्वां दुर्निरीक्षं समन्ताद्दीप्तानलार्कद्युतिमप्रमेयम् ॥ १७॥
கிரீடிநம் கதிநம் சக்ரிணஞ்ச தேஜோராசிம் ஸர்வதோ தீப்திமந்தம் |
பச்யாமி த்வா துர்நிரீக்ஷம் ஸமந்தாத் தீப்தாநலார்கத்யுதிம் அப்ரமேயம் ||     11.17

எனக்குத் தேஜோமயமாய் எங்கும் பிரகாசித்துக் கொண்டு காணக் கண் கூசி கொழுந்து விட்டெரியும் தீபம் போலவும், சூரிய ஒளி போலவும் அளப்பரியவராய் உள்ள உம்மை, கிரீடம், கதை, சக்ராயுதம் உடையவராய் எங்கும் காண்கிறேன் நான்.

கிரீடம், சங்கம், சக்ரம், கதை இவைகளைத் தரித்திருப்பதைக் கொண்டு இவனே பரமபுருஷனான ஸ்ரீமந்நாராயணன் (மஹாவிஷ்ணு) என்பதை அர்ஜுனன் நேருக்கு நேர் கண்டு அறிந்தான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top