அந்த முக்த ஜீவன் எங்கும் பல கைகால்கள் இருந்தால் எதைச் செய்யக்கூடுமோ, எங்கும் பல கண்கள் காதுகளிருந்தால் எதைக் காணவும் கேட்கவும் முடியுமோ, அவைகளையெல்லாம் செய்யவும் காணவும் கேட்கவும் சக்தி படைத்தவன். தன் ஜ்ஞான ஒளியினால் எங்கும் பரந்திருப்பவன்.
தனக்குப் புலன்களில்லாமலிருந்தும், உடலின் புலன்களின் செயல்களினால் பிரகாசிக்கிறான். சரீரத்தினுள் அவன் இருந்தும், அச்சரீரத்தினுள் சம்பந்தமற்று இருந்து, அவ்வுடலை தரிக்கிறான்; சரீரத்தின் ஸத்வ ரஜஸ் தமோ குணங்கள் ஜீவனுக்கில்லாமலிருந்தும் அக்குணங்களின் பலனை அனுபவிக்கிறான்.