பகவத் கீதை

பதினைந்தாம் அத்தியாயம் - புருஷோத்தம ப்ராப்தியோகம்

श्रीभगवानुवाच –
ऊर्ध्वमूलमध: शाखमश्वत्थं प्राहुरव्ययम् ।
छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित् ॥ १५.१ ॥

ஸ்ரீ பகவான் உவாச:-
ஊர்த்வ மூலம் அதச்சாகம் அஸ்வத்தம் ப்ராஹுர் அவ்யயம் |
சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித் ||          15.1

பதினைந்தாம் அத்தியாயம், அவதாரிகை:-

ஸ்ரீ பார்த்தஸாரதி அருளிச்செய்த கீதா சாஸ்திரம் பதினெட்டு அத்யாயங்கள் கொண்டது. ஷட்கம் என்பது ஆறு பகுதிகளைக் கொண்டது என்று பொருள்படும். முதல் ஆறு அத்யாயங்கள் ஒரு ஷட்கம்; ஏழாம் அத்யாயம் முதல் பன்னிரண்டாம் அத்யாயம் முடிய இரண்டாம் ஷட்கமாகும். இப்படி கீதா சாஸ்திரம் மூன்று ஷட்கங்களாக வகுக்கப்பட்டிருக்கிறது.

அத்வைத மதத்தை நன்கு அறியாமல் விசிஷ்டாத்வைதத்தை அறிவது எளிதன்று.

அத்வைத மதம்: ப்ரஹ்மம் ஒன்றே உண்மைப் பொருள். மற்ற எல்லாப் பொருள்களும் மித்யை; பொய்த் தோற்றம். ஒருவன் ஒரு முத்துச் சிப்பியைக் கண்டு, அதை வெள்ளி என்று பிரமிக்கிறான். ஆசையுடன் அதை எடுக்கச் செல்கிறான். எதிரில் வரும் ஒரு நண்பன் “அது வெள்ளியன்று, சிப்பி” என்கிறான். அதைக்கேட்டு வெள்ளி என்கிற அறியாமை விலகுகிறது. அதுபோல் உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் ஒரே உண்மையான ப்ரஹ்மமாயிருக்க, அறிவின்மையினால் அந்த உண்மைப் பொருளை மனிதனாகவும், பசு, பக்ஷி, செடி கொடிகளாகவும் நாம் பிரமிக்கிறோம். ஆசார்ய உபதேசத்தினாலும், "தத்வமஸி' போன்ற வேத வாக்யங்களினாலும், ப்ரஹ்மம் ஒன்றே உண்மைப் பொருள் என்கிற ஞானம் உண்டாகிறது. இந்த ஜ்ஞான நிலையே முக்தி. இதற்கு ஜ்ஞானமே ஸாதனம். மற்ற கர்ம யோகம், ஞானயோகம் பக்தி யோகம் ஒன்றும் ஸாதனமன்று. இதுவே அத்வைத மதக் கொள்கை. பக்திக்கு, பக்தி செய்பவன் ஓருவன், பக்தி செய்யப்படுபவனான பகவான் மற்றொருவன் என இரண்டு தத்வங்கள் இருக்க வேண்டியதாகையாலே, பக்தியை இம்மதத்தில் ஏற்றுக் கொள்ள இயலாது.

விசிஷ்டாத்வைத மதம்: அறிவில்லாத அசேதனப் பொருள்கள் (அசித்), அறிவுள்ள ஜீவாத்மாக்கள் (சித்), ஸர்வஜ்ஞனான ஸர்வேச்வரன் என மூன்றும் உண்மையான தத்வங்களே. எக்காலத்திலும் உள்ளவை. ஒன்றைவிட்டு ஒன்று பிரியாதவை. அறிவற்ற உடலில் கட்டுண்டு உழலும் அறிவுள்ள ஜீவன், பரமபதம் என்கிற தேச விசேஷம் சென்று அங்கு பகவானுக்குத் தொண்டு செய்து வாழ்வதே மோக்ஷம். இதுவே மேலான பயன். இதைப் பெற பகவத்பக்தியே ஸாதனம். கர்ம யோகம் ஜ்ஞான யோகங்கள் இந்த பக்திக்கு அங்கங்கள்; அதாவது பக்தி உண்டாக உதவுகின்றன. ஆகையினால் கிருஷ்ணன் முதல் ஷட்கத்தில், பக்திக்கு அங்கங்களான கர்ம, ஜ்ஞான யோகங்களையும், அதற்கு வேண்டிய சரீர ஆத்ம விவேகத்தையும் விரிவாக உபதேசித்தான். இந்த இரண்டாம் ஷட்கத்தில் அங்கியான பகவத் பக்தியை உபதேசிக்கிறான்.

சாஸ்திரங்களில் ஒருவன் மோக்ஷம் பெற ஓர் அடைவு சொல்லப்பட்டிருக்கிறது.

அவையாவன:- அத்வேஷம், ஆபிமுக்யம், ஆசார்ய உபதேசம், கர்மாநுஷ்டானம், சித்த சுத்தி, சரீர ஆத்ம விவேகம், கர்மயோகம், ஜ்ஞான யோகம், ஆத்ம தரிசனம், பகவத் பக்தி: இந்த பக்தி, பரபக்தி பரஜ்ஞானம், பரபக்தியாக பக்குவம் அடைந்து பிறகு மோக்ஷம் அடைகிறான்.

தாழ்ந்த நிலையிலுள்ள ஜீவன், உயர்ந்த நிலையான மோக்ஷம் பெற ஒரு படிக்கட்டு போல ஓர் அடைவு சொல்லப்பட்டிருக்கிறது. இதை கண்ணன் ஆத்ம தரிசனம் பெறும்வரையில் விரிவாக முதல் ஷட்கத்தில் உபதேசித்தான். இந்த இரண்டாம் ஷட்கத்தில் பக்தியை உபதேசிக்கிறான்.

பக்தி என்றால் என்ன ? “மஹநீய விஷயே ப்ரீதி: பக்தி:” உயர்ந்தவனிடம் தாழ்ந்தவன் செய்யும் அன்பே பக்தி எனப்படும். தாழ்ந்தவனான ஜீவனின் ஸ்வரூபத்தைப் பற்றியும், பக்தி பெற அவன் செய்ய வேண்டியவைகளையும் முதல் ஷட்கத்தில் கூறினான் கண்ணன். உயர்ந்தவனான தன் ஸ்வரூப, ரூப, விபவ குணங்களைப் பற்றியும் பக்தி செய்யும் விதத்தையும் இந்த இரண்டாம் ஷட்கத்தில் கிருஷ்ணன் சொல்கிறான்.

ஸ்லோகப் பொருள் :

கண்ணன் கூறியது.

நைமித்திக ச்ருஷ்டியில் இவ்வுலகமெல்லாம் மேலே சத்ய லோகத்திலிருக்கும் நான்முக ப்ரஹ்மாவினால் படைக்கப்படுகிறது. ஜகத்திற்கு இந்த ப்ரஹ்மாவே காரணமாயிருப்பதினால், வேர் மேலே உள்ளது என்கிறான். பூமியில் ஸம்ஸாரம் படர்கிறதாகையினால், கீழே கிளைகளும் இலைகளும் ச்ருதியில் சொல்லப்பட்ட காம்ய கர்மாக்களே இந்த மரத்தின் கிளைகள்; அதனால் பிறவியும் ஸம்ஸார பந்தமும் வளர்கிறது; இதை அறிந்தவனே வேதவித்து; வேதத்தை அறிந்தவன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top