பகவத் கீதை வெண்பா துங்கமுதற் றேவனீ தொல்புருட னிவ்வுலகுக்கங்குநிதி நீயறிவோ னவ்வறிவிற் – றங்குபொருண்மேலுயருந் தாமமுநீ மிக்கனந்த ரூபாநின்பாலுலகி னின்றாய் பரந்து. 11.39 துங்க முதல் தேவன் நீ மிகப்பெரிய ஆதிதேவன் நீயே தொல் புருடன் நீ புராண புருஷன் நீயே அங்கு இவ்வுலகுக்கு நிதி நீ அத்தகைய இவ்வுலகுக்கு ஆதாரம் நீயே அறிவோன் (உலகிலுள்ள எல்லா) அறிபவனும் அந்த அறிவில் தங்கு பொருள் அந்த அறிவினால் அறியப்படும் பொருளும் மேல் உயரும் தாமமும் நீ மேல் உள்ள பரமபதமும் நீயே அநந்தரூபா அளவற்ற உருவங்களையுடையவனே! நின்பால் உலகில் உன்னிடம் தங்கி நிற்கும் உலகில் மிக்கு பரந்து நின்றாய் மிகவும் வியாபித்து விளங்குகிறாய் நீ Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0