பகவத் கீதை வெண்பா

ஏவரித தன்மியமா மின்னமுத யோகத்தை 
மேவி யுரைத்தவகை மேவுவா-ராவலுட ள
னெற்பரம ராகு மெழிற்பத்தர் யானுகப்ப
நிற்பரவர் மேலாய் நிகழ்ந்து.          12.19

ஏவர்

எவர்கள்

இத்தன்மியமாம் இன்னமுத யோகத்தை மேவி

ப்ராபகமாகவும ப்ராப்யமாகவும் இருக்கும் இந்த பக்தியோகத்தைக் கைக்கொண்டு

உரைத்த வகை மேவுவார்

இந்த அத்யாயத்தின் இரண்டாவது ஸ்லோகத்தில் சொன்னபடி நன்கு அனுஷ்டிக்கிறார்களோ

ஆவலுடன்

ஆர்வத்துடன்

எறபரமர் ஆகும்

எப்போதும் என்னோடு சேர்த்தியை விரும்புகிறவர்களான

எழில் பத்தரவர்

சிறந்த பக்தர்களான அவர்கள்

மேலாய நிகழ்ந்து யானுகப்ப நிற்பர்

மிகச் சிறப்புடன் நான் உகக்கும் படியாயிருப்பார்கள். 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top