பகவத் கீதை வெண்பா

என்னிடையே நெஞ்சையமர்ந தெனபாற றுணிவினைவை 
பின்னிதன்மேற் சங்கையில்லை பீடுடனே – மன்னியமர்ந
தென்பாலே யென்று மினிதா யிருப்புதி நீ 
யனபாலே சொன்னே னமர்ந்து.       12.8

என்னிடையே நெஞ்சை அமர்ந்து

என்னிடமே நெஞ்சைச் செலுத்தி

என் பால் துணிவினை வை

என்னிடமே மேலான பயன் என்னும் உறுதியைக் கொள்வாய்

பின்

இப்படிக் கொண்ட பின்பு

பீடுடனே மன்னி அமர்ந்து என்பாலே என்றும் இனிதாய் நீ இருப்புதி

பெருமையுடன் நிலைபெற்றுப் பொருந்தி என்னிடமே எப்போதும் இனிமையுடன் நீ வாழ்வாய்

இதன்மேல் சங்கை இல்லை

இதில் யாதொரு ஐயமும் இல்லை

அன்பாலே அமர்ந்து சொ்னேன்

(உன்னிடம்) அன்பாலே பரிவுடன் சொன்னேன். 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top