பகவத் கீதை வெண்பா உன்நெஞ்சை யென்பானீ யுற்றிருத்த மாட்டாயேற் பின்னன்பி னிற்பயிலும் பெற்றிமைசேர் – நன்னெஞ்சுற றென்னை யடைந்தமாவா னிச்சியாய நிச்சயித்து மனனா தனஞ்சயனே மற்று. 12.9 மன்னா தனஞ்சயனே அரசனான அர்ஜுனா ! மற்று இனி இனி உன் நெஞ்சை என்பால் உற்று நீ இருத்த மாட்டாயேல் உன் நெஞ்சை என்னிடம் நீ உறுதியாக வைக்க இயலவில்லையானால் பின் அப்போது அன்பினில் பயிலும் பெற்றிமை சேர் நல்நெஞ்சு உற்று (ஸகல கல்யாண குணங்களையுடைய என்னிடம்) ஒப்பற்ற அன்புடன் கூடிய நினைவை நல்ல நெஞ்சில் பழகுவதன்மூலம் நிச்சயித்து உறுதியான மனஈடுபாட்டைப்பெற்று என்னை அடைந்து அமர்வான் இச்சியாய என்னை அடைந்து பொருந்த விரும்புவாயாக. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0