பகவத் கீதை வெண்பா

தேசகா வஞ்சிறப்புச் சிந்தியா தேற்பவன்பா
லாசின்மை பாரா தவமதித்து – நேசஞ்செய்
யாதரிப்ப தில்லாத வத்தானம் பிற்குணத்தை
மீதரிப்ப தென்றுரைப்பர் மிக்கு.        17.23

தேசகாலம் சிறப்புச் சிந்தியாது

தேசம் காலம் ஆகியவற்றின் சிறப்பை ஆராயாமலும் [சிறப்பற்ற தேசத்திலும் காலத்திலும்]

ஏற்பவன் பால் ஆசின்மை பாராது

தானம் வாங்குகிறவனிடம் குற்றம் இருக்கிறதா இல்லையா என்று ஆராயாமலும் [குற்றமுள்ளவனுக்கும்]

அவமதித்து

[வாங்குபவனை) அவமானம் செய்தும்

நேசம் செய் ஆதரிப்பதில் லாத

அன்பும் ஆதரவுமில்லாமலும் (அளிக்கப்படும்),

அத்தானம்

அந்த தானம்

பிற்குணத்தை மிக்கு மீதரிப்பது

கடைசி குணமான தமோகுணத்தை மிகவும் கொண்டது

என்று உரைப்பர்

என்று (பெரியோர்கள்) கூறுவர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top