பகவத் கீதை வெண்பா

ஓந்தற் சத்தென்னு முரைமூன்று மொண்மறையாய்
வாய்ந்த பிரமத்தின் மன்னியவை – யேய்ந்திவ்
விலக்கணத்தா லந்தணர்கள் வேதங்க ளெச்சங்
கலக்க மறவுண்டாங் காண்.          17.24

ஓம் தத் சத் என்னும் உரை மூன்றும்

'ஓம் தத் ஸத்' என்னும் மூன்று விதமான சப்தமும்

ஒண்மறையாய் வாய்ந்த பிரமத்தின் மன்னியவை

வைதிககர்மத்துடன் சேர்ந்திருக்க வேண்டியவை

அந்தணர்கள்

வேதத்தில் அதிகாரமுடைய முதல் மூன்று வருணத்தவர்களும்

வேதங்கள்

வேதங்களும்

எச்சம்

யஜ்ஞங்களும்

இவ்விலக்கணத்தால் ஏய்ந்து

இந்த லக்ஷணத்தோடு கூடி

கலக்கம் அற உண்டாம் காண்

(ஸ்ருஷ்டி காலத்தில்) கலக்கமில்லாமல் [என்னால்] உண்டாக்கப்பட்டவை என்று அறிவாய்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top