பகவத் கீதை வெண்பா

என்னை மனனம்பண் ணென்பத்த னாகியே
யென்னை யருச்சி யெனைவணங்கு – என்னையே
மேவுதிநீ மெய்யுனக்கு மிக்கறுதி சொன்னேனா
னோவுதலற் றென்னுகப்பா லுற்று.        18.65

என்பத்தனாகியே

என்னிடத்தில் பக்தி உடையவனாகி

என்னை மனனம் பண்ணு

என்னிடம் எப்பொழுதும் நெஞ்சு செலுத்துவாய்

என்னை அருச்சி

என்னை அர்ச்சிப்பாயாக

எனை வணங்கு

என்னை வணங்குவாயாக

என்னையே நீ மேவுதி

(இப்படி நடந்து கொண்டால்) என்னையே நீ அடைவாய்

மெய்

இது உண்மை

உனக்கு

உனக்கு

நான்

நான்

ஓவுதலற்று

இடைவெளியில்லாமல்

என் உகப்பால்

என்னுடைய ப்ரீதியால்

உற்று மிக்கறுதி சொன்னேன்

உன் முன்பே ப்ரதிஜ்ஞை செய்தேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top