பகவத் கீதை வெண்பா

தோன்றா வயனுடம்பிற் றோன்றும் பொருளெல்லா
மேன்றாம் பகலி னிடையுதிக்கு – மான்றார்ந்தங்
காகு மவையெல்லா மவ்வூருவுள் ளேயடங்கிப்
போகு மிரவாகும் போது.            8.17

தோன்றும் பொருள் எல்லாம்

புலனாகக்கூடிய எல்லாப் பொருள்களும்

தோன்றா அவன் உடம்பில் 

புலனாகாத பிரமனின் உடம்பில்

ஏன்று ஆம் பகலினிடை உதிக்கும்

( அவனது ) பகல் தொடங்கும்போது உண்டாகும்

ஆன்று ஆர்ந்து அங்கு ஆகும் அவையெல்லாம்

அப்படிப் பகலில் அவ்வுடலில் தோன்றும் அப்பொருள்கள் எல்லாம்

இரவாகும்போது

பிரமனுக்கு இரவு ஏற்படும்போது

அவ்வுருவுள்ளே அடங்கிப்போகும்

அப்பிரமனுடைய உருவினுள்ளே லயித்துவிடும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top