பகவத் கீதை வெண்பா

அக்கர மப்பிரம மாமத்தி யாத்துமமாந் 
தொக்க வசித்தின் றொடர்தன்மை – மிக்க
கருமமாங் கண்டதொழில் காரண மாக
வருமங் குயிர்புணர்வார் மாட்டு      8.3

அப்பிரமம்

‘ப்ரஹ்மம்' என்று என்னால் சொல்லப் பட்டது

அக்கரமாம்

முக்தாத்மஸ்வரூபமாகும்

அத்தியாத்துமம்

‘அத்யாத்மம்' என்று என்னால் சொல்லப்பட்டது

தொக்க அசித்தின் தொடர் தன்மை ஆம்

ஆத்மாவோடு (அநாதி காலமாகத்) தொடர்புகொள்ளும் இயல்வுகொண்ட ப்ரக்ருதியாகும்

மிக்க கருமம்

மிகுதியாகவுள்ள கர்மம் எனப்படுவது

புணர்வார் மாட்டு

ஒன்றுசேரும் ஆண் பெண்களிடத்திலே

அங்கு

அப்புணர்ச்சியின்போது

உயிர் வரும் காரணமாக கண்ட தொழில் ஆம்

மனிதர் முதலான ஜீவராசிகள் உண்டாவதற்குக் காரணமாகக் கண்ட (வீர்யத்தை விடுதலாகிற) தொழிலேயாகும் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top