தேவர் தலைவனே! பயங்கரமான கோரைப் பற்களுடன் ஊழிக் காலத்து அக்னிபோல தீப்பொறி பறக்கின்ற உம் கண்களைக் கண்டு பயந்த எனக்கு திசைகள் தெரியவில்லை, மன அமைதியு மில்லை. உலகின் உறைவிடமானவனே எனக்கு நீர் அருள் புரிய வேண்டும். (முன்போலவே எனக்குத் தெளிவை உண்டாக்குக, இல்லையேல் சில விநாடிகளில் என் உயிரே போய்விடும்).