கீதார்த்தசங்க்ரஹம்

निजकर्मादि भक्तथन्तं कुर्यात्प्रीत्यैव कारितः ।
उपायतां परित्यज्य न्यस्येदेवे तु तामभीः ।। ३१ ।|
நிஜகர்மாதி3 ப4க்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித: |
உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யேத்3 தே3வேது தாமபீ4: || 31 ||

நிஜகர்மாதி3

தனது வர்ணாஸ்ரமங்களுக்குரிய கர்மம் தொடக்கமாக,

ப4க்த்யந்தம்

பக்தி ஈறாகவுள்ள அனைத்தையும்,

உபாயதாம் பரித்யஜ்ய

'உபாயம்' என்னும் எண்ணத்தைக் கைவிட்டு,

ப்ரீத்யா ஏவ காரித:

(வகுத்த ஸ்வாமியைப் பற்றியவை என்னும்) அன்பாலேயே தூண்டப்பட்டவனாய்,

குர்யாத்

(பரமைகாந்தியான ஜ்ஞாநி) செய்யக் கடவன்;

அபீ4:

பயமற்றவனாய்,

தாம

அந்த உபாயத்வத்தை,

தே3வே து

எம்பெருமானிடமே,

ந்யஸ்யேத்

அநுஸந்தி4க்கவேண்டும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top