பகவத் கீதை

भवाप्ययौ हि भूतानां श्रुतौ विस्तरयो मया ।
त्वत्तः कमलपत्राक्ष माहात्म्यमपि चाव्ययम् ॥ २ ॥
பவாப்யயௌஹி பூதாநாம் ச்ருதெள விஸ்தரசோ மயா |
த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யம் அபி சாவ்யயம் ||     11.2

தாமரைக்கண்ணா! மேலும் எல்லா உயிர்களின் பிறப்பு, இறப்பு விரிவாக உன்னிடமிருந்து என்னால் கேட்கப்பட்டன. உம்முடைய அழிவற்ற பெருமையையும் கேட்டேன்.

“நத்வேவாஹம் ஜாது நாஸம்” என்கிற சுலோகம் முதல் ஆறாம் அத்தியாயம் முடிய கிருஷ்ணன், ஜீவாத்மா நித்யன் அழிவில்லாதவன், சரீரம் அழியக்கூடியது என்று பல படியாக விரிவாய் சரீர ஆத்மத் தன்மையை உபதேசித்தான். அதைக் கேட்டு எனக்கு சரீரம், ஆத்மா, இவை பற்றிய உண்மை விளங்குகிறது. இவைகளை பற்றிய கலக்கம் நீங்கிற்று என்றான் முதல் சுலோகத்தில்.

இந்த இரண்டாம் சுலோகத்தில், “கண்ணா நீ ஏழாம் அத்தியாயம் முதல், சேதன அசேதனங்களெல்லாம் உன்னிடமிருந்து தோன்றின, உன்னிடமே லயத்தை அடைகின்றன. உன் சங்கல்பத்தினாலேயே படைத்தல், காத்தல், அழித்தல் எல்லாம் நடைபெறுகின்றன, என்று உன் ஸர்வஜ்ஞ, ஸர்வசக்தித்வ குணங்களை யெல்லாம் பரக்க உபதேசித்ததைக் கேட்டறிந்தேன்” என்கிறான் அர்ஜுனன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top