பகவத் கீதை

द्रोणं च भीष्मं च जयद्रथं च कर्णं तथाऽन्यानपि योधवीरान् मुख‍्यान् ।
भया हतांस्त्वं जहि मा व्यथिष्ठा: युध्यस्व जेतासि रणे सपत्‍नान् ॥ ३४॥
த்ரோணஞ்ச பீஷ்மஞ்ச ஜயத்ரதஞ்ச கர்ணம் ததாந்யாநபி யோதமுக்யாந் |
மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதிஷ்ட்டா: யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந் ||     11.34

என்னால் ஏற்கனவே கொல்லப்பட்ட த்ரோணரையும் பீஷ்மரையும் ஜயத்ரதனையும் கர்ணனையும் மற்றும் பல போர்வீரர்களையும் நீ கொல்வாய். அவர்களைப் புதிதாய் நீ கொல்வதாக நினைத்து கலங்காதே. போரில் நீயே வெற்றி பெறுவாய், போர் புரி.

அர்ஜுன! நான் அவர்களை எல்லாம் கொல்ல சங்கல்பித்து விட்டேன். நான் ஸத்ய ஸங்கல்பன். என் நினைவு ஒருபோதும் மாறாது. நான் நினைத்த காரியம் நடந்தே தீரும். நமக்குப் போரில் வெற்றி கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற சந்தேகம் வேண்டாம்; வெற்றியும், புகழும், அரசும் கட்டாயம் உனக்குக் கிடைக்கும், போர் செய்ய எழுந்திரு என்றான் கண்ணன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top