பகவத் கீதை வெண்பா

ஓங்கு மெரிமுகங்க ளாலே யுலகனைத்தும்
வாங்கி விழுங்கிப்பின் வாய்நக்கு – மாங்குனது
பேரொளிதந் தேசாற் பெருகத் தபிப்பிக்கும்
பாருலக மெங்கும் பரந்து.   11.31

உலகு அனைத்தும்

ராஜஸமூஹம் முழுவதையும்

ஓங்கும் எரிமுகங்களாலே

கொழுந்துவிட்டெரியும் வாய்களாலே

வாங்கி விழுங்கி பின்

உள்ளிழுத்து விழுங்கி அதற்குப்பின்

ஆங்கு வாய் நக்கும்

வாயிலுள்ள உதடுகள் முதலானவற்றை நக்கிக்கொடுக்கும்

உனது பேர் ஒளி

உன்னுடைய மிகக்கடுமையான கிரணங்கள்

தம் தேசால்

தமது ஒளியாலே

பார் உலகம் எங்கும் பரந்து

உலகனைத்தையும் வியாபித்து

பெருக தபிப்பிக்கும்

மிகவும் வாட்டும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top