பகவத் கீதை வெண்பா

முற்குணத்தி லாகு முழுதுணர்வு தானிடையி
லற்குணத்து லோப மதுவுண்டாம் – பிற்குணத்தி
லோராமை மோக முணராமை யுண்டாகுஞ்
சீரார் புகழ்விசயா சேர்ந்து.            14 . 17

சீரார் புகழ் விசயா

சிறப்பு மிக்க புகழை உடைய அர்ஜூனா!

முன் குணத்தில்

முதல் குணமான ஸத்வ குணத்தினால்,

முழுது உணர்வு தான் ஆகும்

ஆத்மாவை நேரே காண்பது வரையிலான அறிவு உண்டாகும்;

இடையில் அல் குணத்து

நடுவிலுள்ள தீய ரஜோகுணத்தால்,

லோபம் அது உண்டாம்

ஸ்வர்க்கம் முதலான பலன்களில் ஆசை உண்டாகும்;

பின் குணத்தில்

பிற்பட்ட (தாழ்ந்த) தமோகுணத்தால்,

ஓராமை

கவனமில்லாமையால் விளையும் தீயகர்மங்களில் முயற்சியும்,

மோகம்

அதனால் விளையும்) விபரீத ஜ்ஞாநமும்,

உணராமை

(அதனால் விளையும்) அறிவின்மையும்,

சேர்ந்து உண்டாகும்

ஒன்று கூடி உண்டாகும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top