பகவத் கீதை வெண்பா

பொறிவாச லெல்லா மடைத்தகவாய்ப் புந்தி 
நெறியாக்கி மீது நிறுத்திச் – செறியோக 
னோங்காரஞ் செப்பியெனை யுன்னி யுடலொழித்துப்
போங்காற் பரமகதி போம்.      8.12

பொறி வாசல் எல்லாம்

(அறிவு வெளிப்படும்) வாசல்களாயிருக்கும் ஞானேந்திரியங்கள் அனைத்தையும்

அடைத்து

( தமது தொழிலைச் செய்யாதபடி) அடக்கி

புந்தி

மனத்தை

அகவாய்

ஹ்ருதய கமலத்திலிருக்கும் அக்ஷரபுருஷனான என்னிடத்திலே

நெறியாக்கி

ஈடு படுத்தி

செறி யோகன்

(என்னிடத்தில் அசையாத நிலையை அடைந்தவனாய்

ஓங்காரம் செப்பி

(என்னைச் சொல்லும்) ப்ரணவமாகிற ஓரெழுத்தைச் சொல்லி

எனை உன்னி

( அதன் பொருளான ) என்னை அநுஸந்தித்து

மீது நிறுத்தி

(தனது ப்ராணவாயுவைத் ) தலையிலே (மூர்த்தன்ய நாடி வழியாகப்) புகச்செய்து

உடல் ஒழித்து போங்கால்

உடலை விட்டுப்போகும் ஸமயத்தில்

பரமகதிபோம்

(முற்கூறிய கைவல்யார்த்தி) ஸம்ஸாரமண்டலத்திற்குத் திரும்பி வருதலில்லாததாகையாலே மிகச்சிறந்த ப்ராப்யமான ப்ரக்ருதிவியுக்தமான தன் ஆத்மஸ்வரூபத்தை அடைவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top