பகவத் கீதை வெண்பா

பகவத்கீதை வெண்பா பாயிரம்

கண்ணாநீ பார்த்தற்குக் காத்தற் கினிதுரைத்த
திண்ணார் திறமருளுஞ் சீர்கீதை யெண்ணாரு
நன்பொருளை யெங்கட்கு நாதா வருளுதலாற்
புன்பொருளிற் போகா புலன்.

ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா முதல் அத்யாயம் -
அர்ஜுனவிஷாதயோகம்

வேண்டிடத்தி லன்றி வெறுத்து நலமிரக்கம்
பூண்டவற்றைப் பொல்லாப் புலமென்று – மீண்டகன்று
சுற்றமது நோக்கியே சோகித்த தேர் விசய
னுற்றமயல் சொல்லுமுத லோத்து.

ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா இரண்டாம் அத்யாயம் - ஸாங்க்யயோகம்

மேலிரண்டா மோத்தால் விசயன் வெறுப்பகற்றக்
கோலி யுயிருடலின் கூற்றிவைகள் – காலியுடன்
போமாயன் மன்னுயிர்கள் பொன்றாமை முன்னகமா
மாமாயன் சொன்னான் மகிழ்ந்து.

ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா மூன்றாம் அத்தியாயம்- கர்மயோகம்

மூன்றாமோத் தாகுமிது முன்னுரைத்த புந்தியினும்
ஏன்றா வதுகரும மென்பதனா – லான்றமைந்து
தன்கருமஞ் செய்யுமதே தக்கதென மிக்குரைக்கும்
வன்கருமந் தீரும் வகை.

ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா நான்காம் அத்தியாயம்- ஞான (விபாக) யோகம்

நாராயணன்கீதை நாலாமோத் திற்றனது
சீரார் பிறவிச் சிறப்புடனே – யேராரும்
யோகத் துடன்கரும முற்றியலு மாறுரைக்கு
மேகப் பலபரிசா வேய்ந்து.

ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா ஐந்தாம் அத்யாயம்-ஐந்தாமத்தியாயம் 

கரும விடுமறிவுங் கண்ணவதற் பின்னு
மொருமையுடன் யோகு முரைத்தி-யிருமையிலு
மொன்றுரைப்பா யென்றுரைத்தான் பார்த்தனுயரிறையும்
நின்றுரைத்தா னிச்சயத்தை நேர்ந்து. 

ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா ஆறாம் அத்தியாயம்- அத்யாத்மயோகம்

கன்மபலனண்ணாது காரியமென் றுன்னியவத் 
தன்மையுமத்தூய்மனத்திற்சார்ந்தியல்வா – னன்மையமர்
ஞானியவன் யோகியவ னல்லங்கி யிற்கிரிசை
தானிகழா னென்றுஞ் சமைந்து. 

ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா ஏழாவது அத்யாயம்- விஜ்ஞானயோகம்

முன்னாறு நல்லுணர்வின் முற்றுங் கருமத்தால்
தன்னார் உயிருணர்வு தானுரைத்துப்-பின்னார்வத்
தேறு மனத்தா லிறைவன்பா லன்புசெயல்
கூறு நடுவாறுங் கூர்ந்து.

ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா எட்டாம் அத்யாயம்-அப்யாஸயோகம்

போக முயிருண்மை பூமகள் கோனைப்பெறுதற்
காக முயல்வார்க் கறிவமர , மேகநிறத் 
தெம்மா னருள்கீதை யெட்டாமோத் திற்பொருள்கள்
செய்ம்மா வகையுரைக்குஞ் சேர்ந்து.

ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா ஒன்பதாம் அத்யாயம்- ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்

உன்னப் படும்பர னொண்சீர் மருவுயா்த்தி
மன்னப் பயில்ஞான வாசிதான் – றன்னமா்ந்து
நின்றியலும் பத்தி நிகழ்ந்துரைத்த நற்கீதை
யொன்றியசீ ரொன்பதா மோத்து.

ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா பத்தாம் அத்யாயம்- விபூதியோகம்

அண்ண லுலகி லனைத்துந்தா னாய்நின்ற
வணணம் விரித்துரைத்த வண்மையினைத்- திண்ணமாங்
கனபுறவே யோங்க வருள்கீதை பத்தாமோத்
தின்புறவே யோது மெடுத்து.

Chapters

All topics
0
Chapter - 0
0
Chapter - 1
0
Chapter - 2
0
Chapter - 3
0
Chapter - 4
0
Chapter - 5
0
Chapter - 6
0
Chapter - 7
0
Chapter - 8
0
Chapter - 9
0

Chapters

Chapter List

Stay updated with Bhagavat Geethai

Email Subscription
Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top